விசாரணையை ஏற்ற என்.ஐ.ஏ

மங்களூருவில் கடந்த மாதம் 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர், தேடப்பட்டு வந்த பயங்கரவாதியான சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் என்பது தெரியவந்தது. இந்த வழக்கின் விசாரணையை கர்நாடக காவல்துறை மேற்கொண்டு வந்தது.  விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கை என்.ஐ.ஏவுக்கு மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்தது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின் பேரில், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை தர்போது என்.ஐ.ஏ முழுமையாக ஏற்றுள்ளது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷாரிக்கிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.