இஸ்ரோவுடன் புதிய ஒப்பந்தங்கள்

டெல்லியில் நடைபெற்ற அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் நான்காவது கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘கடந்த இரண்டே ஆண்டுகளில் விண்வெளித் துறையைச் சேர்ந்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் 55 புதிய தொழில்கள் பதிவு செய்துள்ளன. இந்த 55 புதிய தொழில்களில் 29 செயற்கை கோள் சம்பந்தப்பட்டவை, 10 விண்வெளி பயன்பாடு மற்றும் உற்பத்தி பொருட்கள், 8 செலுத்து வாகனம் சம்பந்தப்பட்டவை, 8 புவிசார் நடைமுறைகள் மற்றும் ஆராய்ச்சிக்கானவை. இவற்றில் 9 திட்டங்கள் 2022 – 23க்குள் நிறைவடையும். பாரத சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவை குறிக்கும் வகையில் 75 மாணவர்களின் செயற்கை கோள்கள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளன’ என்று தெரிவித்தார்.