கனவிலும் நினைக்கவில்லை

தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளரான ஜெகதீப் தங்கர் அவரது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவருடன் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கூட்டணிக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்பி செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீப் தங்கர், “என்னைப் போன்ற சாமானியனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. விவசாயியின் மகனான நான் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இந்த வாய்ப்பிற்காக பிரதமர் மோடி மற்றும் தேசியக் தலைமைக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.