நேத்ரா ஒரு பல்துறை வித்தகி

தமிழகத்தின் சென்னையை சேர்ந்த பாய்மரப் படகு வீராங்கனை நேத்ரா, ஏற்கனவே, 2014, 2018 ஆசிய விளையாட்டில் பங்கேற்றவர். 2020ல் நடந்த உலக கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஓமனில் நடந்த ஆசிய பிரிவுக்கான ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் பாய்மரப் படகு பிரிவில், ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள பாரதத்தை சேர்ந்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர் பாய்மரப்படகு வீராங்கனை மட்டுமல்ல, டென்னிஸ், கூடைப்பந்து, சைக்கிளிங், பரத நாட்டியம், பாடகி என பல்துறை வித்தகியுமாக திகழ்கிறார்.