என்.சி.சி குடியரசு தின முகாம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் 29 வரை டெல்லி கண்டோன்மென்ட் பகுதி அணிவகுப்பு மைதானத்தில் என்.சி.சி குடியரசு தின முகாம் நடைபெறும். 2022 என்.சி.சி குடியரசு தின முகாமை என்.சி.சி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜென்ரல் குர்பீர்பால் சிங் தொடங்கி வைத்தார். இதில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2,200 மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஒரு மாதம் நடைபெறும் இந்த முகாமில் பயிற்சியில் தலைமையகங்களுக்கு இடையேயான போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள், தேசிய ஒருமைப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் 2 தேசிய மாணவர் படை (என்.சி.சி) அணியினர் அணிவகுத்து வருவார்கள். இவ்வாண்டு கொரோனா விதிமுறைகள் காரணமாக என்.சி.சி மாணவர்கள் எண்ணிக்கை 560, பெண்கள் உள்பட 1,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் ஜனவரி 28 அன்று பிரதமரின் அணிவகுப்பு மரியாதை ஏற்புடன் நிறைவடையும்.