கப்பல் பயணிக்கு உதவிய கடற்படை

கேரள மாநிலம், கொச்சி அருகே பயணித்துக் கொண்டிருந்த எம்வி லிரிக் போயட் என்ற சரக்கு கப்பலிலிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று செப்டம்பர் 28, 2021  மாலை 4 மணிக்கு கடலோர காவல் படை தலைமையகத்திடமிருந்து கடற்படையின் தெற்கு கடற்படை கட்டுப்பாட்டு தலைமையகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட கடற்படை, மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் உதவியுடன் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி அவரை ஐ.என்.எஸ் கருடா படைத்தளத்திற்கு அழைத்துவந்தது. அந்த நோயாளி, ஐஎன்ஹெச்எஸ் சஞ்சீவனி கடற்படை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார்.