தேசிய ஆசிரியர் சங்க கூட்டம்

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் நந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் திரிலோக சந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில்ABRSM தேசிய பொதுச்செயலாளர் சிவானந்த் கரே, தேசிய இணை அமைப்புச் செயலாளர் லட்சுமணன் , நந்தா பொறியியல் கல்லூரி CEO ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ABRSM தேசிய பொதுச் செயலாளர் சிவானந்த் சிந்தன் கரே 75 வது சுதந்திர திருநாள் அமிர்த பெரு விழா வைக் கொண்டாடுவதன் பொருட்டு “எனது பள்ளி எனது புனிதத்தலம்” திட்டத்தை முதல்  கட்டமாக 75 பள்ளிகளில் செயல்படுத்த துவக்கி வைத்து தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் முயற்சியால் அவரவர் பள்ளிகளில் இயன்றவரை முன்னேற்றத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பொதுக்குழு தீர்மானங்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.