இலக்கை எட்ட பாடுபட வேண்டும்

அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நிலக்கரியிலிருந்து மெத்தனால் எடுக்கும் நாட்டின் முதல் ஆலையை மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதனை பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் (பெல்) உருவாக்கியுள்ளது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில், பெல் நிறுவனத்தில் தலைமை நிர்வாக இயக்குனர் டாக்டர் நலின் சிங்கால், கனரக தொழில்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ஜித்தேந்திர சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ‘தற்சார்பு பாரதம் மற்றும் எதிர்காலத்துக்கான சுத்தமான, பசுமையான எரிசக்தித் தேவைகள் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்தை அடைய நாம் பாடுபட வேண்டும்.  இதனை அடைவதில், உற்பத்தி துறையின் பங்கு மிக முக்கியமானது. மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு பாரதம் போன்ற திட்டங்கள் மூலம் உற்பத்தி துறையின், முக்கியத்துவத்தை அரசு ஏற்கனவே எடுத்துக் கூறிவருகிறது. மூலதன பொருட்கள் தொழில்துறை, உற்பத்தி துறையின் முதுகெலும்பாக உள்ளது’ எனக் கூறினார்.