ஸ்ரீராம நவமியை சீர்குலைத்த முஸ்லிம்கள்

ஸ்ரீராமரின் பிறந்தநாளான ராம நவமி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆனால், பாரதத்தின் பல்வேறு இடங்களில் இந்த விழாவை சீர்குலைக்கும் விதமாக முஸ்லிம் வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் வி.ஹெச்.பி ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீராம நவமி ஊர்வலத்தின் மீது ஒரு முஸ்லீம் கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மேற்கு வங்க காவலர்கள் ஹிந்து பக்தர்கள் மீது தடியடி நடத்தினர்.

குஜராத்தின் சபர்கந்தாவின் ஹிம்மத்நகரில் உள்ள சபரியா கிராமத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஸ்ரீராம நவமி ஊர்வலத்தின் மீது முஸ்லீம் கும்பல் கற்களை வீசி தாக்கியதுடன் ஊர்வலத்தில் பங்கேற்ற பல வாகனங்களுக்கு தீ வைத்தது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம் ஷோபா யாத்திரையும் முஸ்லிம்களால் தாக்கப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்ற பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

மத்திய பிரதேசத்திலும் முஸ்லிம்கள் ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்களுக்கு இடையூறு செய்தனர். அங்கும் கல் வீச்சு நடத்தப்பட்டதுடன் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

இப்படி பல்வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் அவர்களின் சகிப்புத் தன்மையின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.