பாலியல் குற்றச்சாட்டில் முஸ்லிம் மதகுரு

கேரள மாநிலம், கொய்க்கூர்கோணம் என்ற பகுதியில் வசிக்கும் அப்துல் ஜாபர் என்ற முஸ்லிம் மதகுரு அங்கு மதரசாவில் பாடம் படிக்க வந்த 11 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். எனினும் அச்சிறுவன் தன் தாயிடம் இதை கூறினான். அவனது தாய் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் அப்துல் ஜாபரை காவல்துறை கைது செய்தது.

பீகார் மாநிலம் மிதிலா பகுதியில் உள்ள சீதாமர்ஹி மாவட்டத்தில், மதரசாவில் படிக்க வந்த ஒரு சிறுமியை மதகுரு மௌல்வி தப்ரேஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை பதிவு செய்து வைத்துக்கொண்டு வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிடுவேன் என சொல்லி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அந்த சிறுமி கர்பமடைந்தார். இது வீட்டிற்கு தெரிய வரவே வேறு வழியில்லாமல் அனைத்தையும் கூறியுள்ளார் சிறுமி. இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பீகாரின் பாட்னாவில் நடைபெற்ற இதேபோன்றதொரு சம்பவத்தில், மனேர் பகுதி மதரசாவில் படிக்கும் ஒரு சிறுமியை அந்த பள்ளியின் மதகுரு ஷாபாஸ் ராசா கற்பழிக்க முயன்றார். பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அவரை கைது செய்ய வந்தது. இதனையடுத்து ஷாபாஸ் ராசா மதரசாவை விட்டு வெளியேறி தப்பினார். அவரையும் காவல்துறை தேடி வருகிறது.