வீடியோ வெளியிட்டதால் கொலை

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தண்டுகாவை சேர்ந்த கிஷன் பொலியா என்ற இளைஞர் பகிர்ந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவில் அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அல்லா, ஏசு உட்பட மற்ற அனைத்துக் கடவுள்களை விடவும் பெரியவர், வலிமையானவர் என்று வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கிஷன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்விவகாரத்தில் முஸ்லிம்கள் பிரச்சனை செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே காவலர்கள் சமரசம் செய்தனர். கிஷன் மன்னிப்பு கேட்டார். எனினும், இதில் திருப்தி அடையாத முஸ்லிம்கள் அவர் மீது கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், கடந்த செவ்வாயன்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கிஷனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறது. மதசகிப்புத்தன்மை என்பது சிறிதும் அற்ற இப்படிப்பட்ட பல நூறு பயங்கரவாத சம்பவங்கள், உண்மையான மதசகிப்புத்தன்மை யாருக்கு உள்ளது என்ற கேள்வியை எழுப்புவதில் ஆச்சரியமில்லை.