மசூதி ஒலிப்பெருக்கி பிரச்சனை

மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். மகாராஷ்டிர அரசு அவ்வாறு செய்யத் தவறினால், மசூதிகள் முன் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தி ‘ஹனுமான் சாலிசா’ இசைக்கப்படும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார். மேலும், மும்பை பகுதிகளில் உள்ள மசூதிகள், மதரசாக்களில் காவல் துறையினர் சோதனையிட்டால் பல விஷயங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில்,  மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி, மும்பை காட்கோபரில் உள்ள தனது அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளில் இருந்து ‘ஹனுமான் சாலிசா’வை இசைக்கத் துவங்கியுள்ளது.