விவேகானந்த கேந்திராவில் மோகன் பாகவத்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் புதிதாக கட்டப்பட்ட சுவாமி விவேகானந்த சபா கிரஹம், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி ஆகியோரால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் மனித பரிணாமத்தின் நோக்கம் – இந்திய கலாச்சார சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து பத்மஸ்ரீ நிவேதிதா பிடே எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி புத்தகத்தை வெளியிட அதன் முதல் பிரதியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பெற்றுக்கொண்டார்.

விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பி.பி. சர்சங்கசாலக் ஸ்ரீ. மோகன் ஜி பகவத், விவேகானந்த கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன், வெள்ளிமலை சுவாமி பூஜ்ய சைதன்யானந்தா மகராஜ், கேந்திர செயலாளர் பானு தாஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.