முப்படைகளுக்கு மோடி பாராட்டு

‘கொரோனா நெருக்கடியைத் தடுக்க சிவில் நிர்வாகத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க நான் ஆயுதப்படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். ஆயுதப்படைகளின் திறன்களில் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்’ என்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, ‘கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் நமது முப்படைகள் அனைத்து விதமான சாத்தியகூறுகளையும் செயல்படுத்துகிறது. இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படையுடன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிற அமைப்புகளான டி.ஆர்.டி.ஓ, ஆயுதப்படை மருத்துவ பிரிவுகள், ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை வாரியம், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் (டிபிஎஸ்யு ), என்.சி.சி, கன்டோன்மென்ட்ஸ் போர்டுகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் மக்களின் துன்பங்களைத் தணிக்க உதவுகின்றன’ என பெருமிதம் தெரிவித்தார்.