வாக்காளர்களை மிரட்டும் எம்.எல்.ஏ

மேற்கு வங்கத்தில் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்னும் ஒரு சில வாரங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுக்கினர் நரேந்திரநாத் சக்ரவர்த்தி, இங்கு செல்வாக்கு செலுத்த முடியாத அளவுக்கு பா.ஜ.க ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட வேண்டும். அவர்கள் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வந்தாலே அவர்கள் பா.ஜ.கவுக்கு வாக்களித்ததாகத்தான் நாங்கள் கருதுவோம். தேர்தல் முடிந்ததும், அவர்கள் இங்கு தங்கள் சொந்த பொறுப்பில்தான் வாழ வேண்டும். அவர்கள் வாக்களிக்க வரவில்லை என்றால், அவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்று கருதுவோம். அப்போதுதான் அவர்கள் இங்கு நிம்மதியாக வாழ முடியும். அவர்கள் வியாபாரம், வேலைகள் செய்யலாம். நாங்கள் அவர்களுக்கு பக்கபலமாக நிற்போம்’ என மிரட்டியுள்ளார். இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.