கலப்பு தடுப்பூசி சிறப்பு

கொரோனா தொற்றுக்கு எதிராக ஒரேவகை தடுப்பூசிகள் 2 டோஸ்கள் செலுத்தப்படுகின்றன. இரு வேறு வகை தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்த ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், நமது பாரதத்தில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்த ஆராய்ச்சியை ஐ.சி.எம்.ஆர் மேற்கொண்டது. அதில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக ஐ.சி.எம்., வெளியிட்ட அறிக்கையில், ‘கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசியை கலந்து அளிப்பது தொடர்பான ஆய்வுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது. அப்படி போடுவது பாதுகாப்பானது மட்டும் அல்லாமல், சிறந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.