அமைச்சர் பொன்முடி மனு தள்ளுபடி

கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் அவரது உறவினர்கள் செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. இதன்மூலம் 28 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர்களுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு நீதிமன்றம். இதனை எதிர்த்தும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் பொன்முடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்களாக உள்ளது என கூறி பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.