ராணுவ சமூக ஊடகம் முடக்கம்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியாற்றும் இந்திய ராணுவத்தின் முக்கிய பிரிவன சினார் கார்ப்ஸின் சமூக ஊடக கணக்கை முகநூலும் இன்ஸ்டாகிராமும் ஒரு வாரத்திற்கும் மேலாக முடக்கி வைத்துள்ளன.  இதுகுறித்த ராணுவத்தின் புகாருக்கு இதுவரை அந்நிறுவனங்கள் பதில் அளிக்கவில்லை. எல்லைத் தாண்டி பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கவும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் உண்மையான நிலைமையை மக்களுக்கு தெரிவிக்கவும் சினார் கார்ப்ஸ் படைப்பிரிவால் இந்த சமூக ஊடகக் கணக்கு துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.