ராணுவ ஒத்துழைப்பு

ஓமன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சக தலைமைச் செயலாளர் டாக்டர் முகமது பின் நாசர் பின் அலி அல் சாபி டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். கடந்த ஜனவரி 31ல் டெல்லியில் நடைபெற்ற இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த 11வது பாரத ஓமன் கூட்டு ராணுவ ஒத்துழைப்பு குழு கூட்டம் பற்றியும், இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்டும் அவர்கள் விவாதித்தனர். மேலும், கூட்டுப் பயிற்சிகள், தொழில்துறை ஒத்துழைப்பு, செயல்பாட்டில் உள்ள பல்வேறு கட்டமைப்பு திட்டங்கள் உள்பட ராணுவங்களுக்கு இடையேயான செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அடுத்த கூட்டுக் கூட்டத்தை ஓமனில் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.