மெட்ரோ தலைவராகும் சஞ்சய் ராமபத்ரன்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், பொது போக்குவரத்திற்கான பேருந்து ரயில்களை இயக்கிவரும் ஹூஸ்டன் மெட்ரோ வாரியத்தின் தலைவர் பேட்மேன், ஐஸ்லாந்திற்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்த வாரியத் தலைவர் பதவிக்கு, பாரத வம்சாவளியை சேர்ந்த சஞ்சய் ராமபத்ரன் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவர் பாரதத்தின் புகழ்பெற்ற ‘பிட்ஸ் பிலானி’ பல்கலைக்கழகத்தில் படித்தவர். கடந்த 2015 முதல் ஹூஸ்டன் மெட்ரோ வாரியத்தில் பணியாற்றி வருகிறார். சஞ்சய் ராமபத்ரனை மெட்ரோ வாரிய உறுப்பினர்கள் முறையாக தேர்வு செய்த பின் அம்மாகாண மேயர் டர்னர், அவரை மெட்ரோ வாரியத்தின் தலைவர் பதவியில் நியமிப்பார். சஞ்சய் ராமபத்ரன் இப்பதவியேற்கும் பட்சத்தில் இந்த பதவியில் அமரும் முதல் பாரத வம்சாவளி நபர் என்ற பெருமையை பெறுவார்.