வெளிவந்த மெகா ஊழல்

வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியபோதும் ஆதாரை வங்கி கணக்கில் இணைத்தபோதும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், எரிவாயு வினியோகம் போன்ற பல்வேறு திட்டங்களில் அதுவரை நடைபெற்ற பலகோடி மதிப்புள்ள ஊழல், முறைகேடுகள் வெளியாகின. அதேபோல, சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும், ‘பாஸ்டேக்’ வசதி கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து, ஒரே நாளில், ரூ.102 கோடி அளவுக்கு, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது, இத்துறையில் நடைபெற்ற மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு நாளில் ரூ. 17 கோடி எனில், ஒரு மாதத்திற்கு 510 கோடியும், ஒரு ஆண்டுக்கு ரூ. 6,120 கோடியும் ஊழல் நடந்துள்ளது