ஆதீனங்கள் முதல்வருடன் சந்திப்பு

தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், காஞ்சிபுரம் ஆதீனம், சூரியநாராயண ஆதீனம், அழகிய மணவாள ஜூயர் உட்பட 11 ஆதீனங்கள் பங்கேற்றனர். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம், ‘திருமடங்களுக்கு பட்டா நிலங்கள் கொடுப்பது குறித்து கோரிக்கை வைத்தோம். திருக்குவளையில் கிடைத்த மரகத லிங்கத்தை மீண்டும் கோயிலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதீனங்களுக்கு என்று தனியாக சட்ட திட்டங்கள் உள்ளன. தமிழக அரசும் ஆன்மிக அரசு தான். அரசு அவர்களின் கொள்கையை கவனித்து வருகின்றனர். நாங்கள் எங்களது கொள்கையை பார்க்கிறோம். எங்களது கொள்கையில் அரசு தலையிடவில்லை என்பதை பாராட்டுகிறோம்’ என்று கூறினார்.