கோயில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்

தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை அரசியல் சார்பின்றி முறையாக நியமனம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், ‘அறங்காவலர் நியமன விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டது. இதுதொடர்பாக நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை இணையதளங்களில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் இதற்கான தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுகான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளை முடிக்க போதிய அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எஞ்சிய 29 மாவட்டங்களிலும் விரைவில் இதற்கான குழுக்கள் அமைக்க அறநிலையத்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 8ம் தேதிக்குள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கே தள்ளி வைத்தனர்.