பி.எப்.ஐ நினைவூட்டிய மாப்ளா பயங்கரம்

அல்லாஹு அக்பர், லா இலஹா இல்லல்லா முஹம்மதுர் ரசூலுல்லா உள்ளிட்ட பல இஸ்லாமிய கோஷங்களுடன் சமீபத்தில் கேரளாவில் பயங்கரவாத ஆதரவு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பினர் பேரணி நடத்தினர். இதில் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்த சிலரை சங்கிலியால் பிணைத்து இழுத்து செல்வதுபோல உருவகப்படுத்தப்பட்டது. பேரணியில் இடம்பெற்றவர்கள் கைகளில் லத்திகள், மண்டை ஓடுகளை கொண்டு சென்றனர். கேரளா, மலப்புரம் தென்ஹிபாலம் நகரில் நடைபெற்ற இந்த ஊர்வலம் ஊரின் முக்கிய வணிக மையமான செல்லாரி வழியாகச் சென்றது. இந்த ஊர்வலம், 1921ல் நடைபெற்ற மாப்ளா இனப்படுகொலையை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது. இந்த கலவரத்தில், ஹிந்துக்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர், பல்லாயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர். பல லட்சம் ஹிந்துக்கள் கேரளாவை விட்டு அகதிகளாக வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.



Community-verified icon