காலியாகும் மமதா கூடாரம்

மேற்கு வங்கத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட பா.ஜ.கவின் பிரம்மாண்டமான பேரணிக்கு பிறகு ஆளும் திருணமுல் கட்சியில் இருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மால்டாவில் திருணமுல் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர், தற்போதைய ஐந்து எம்.எல்.ஏக்கள், சிங்கூர் இயக்கத்தின் முக்கிய முகமான ரவீந்திரநாத் பட்டாச்சார்யா போன்றோர் திருணமுல் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். மேலும், திருணமுல் காங்கிரஸில் நான்கு முறை எம்.எல்.ஏவான சோனாலி குஹா, முன்னாள் கால்பந்து வீரர் தீபேந்து பிஸ்வாஸ், ஜட்டு லஹிரி, ஷீதல் குமார் சர்தார், சரளா முர்மு, நடிகை தனஸ்ரீ சக்ரவர்த்தி, மால்டா தொகுதியில் 38  குழு உறுப்பினர்களில் 22 பேர் என பலர் திருணமுல் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தனர். இந்த பட்டியல் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.