மமதாவுக்கு மேலும் ஒரு சங்கடம்

மேற்கு வங்கத்தில் விரைவில்  சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. சமீபத்தில் அப்துல் மன்னன், ஃபர்ஃபுரா ஷெரீப், மதகுரு அப்பாஸ் சித்திகி   துவங்கிய இந்திய மதச்சார்பற்ற முன்னணி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க காய் நகர்த்தி வருகிறது. மமதா பேனர்ஜியின் தீவிர ஆதரவாளராக இருந்த அப்துல் மன்னன் தற்போது அதில் இருந்து விலகி முஸ்லிம் ஓட்டுகளை குறிவைத்து சமீபத்தில் இந்த கட்சியை துவங்கினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அப்பாஸ் சித்திகி தனது கட்சியின் திட்டங்களுக்கு இணக்கமானவராக இருப்பார் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி மமதாவின் ஓட்டுவங்கியை பெரிதாக பாதிக்கும் என்பதால் கவலையில் ஆழ்ந்துள்ளார் மமதா.