தோல்வி பயத்தில் மமதா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராமில் தான் தோற்றுவிடுவோம் என்பதை நன்றாக உணர்ந்துள்ளார். இதற்காக அவர் நேரடியாகவே நந்திகிராம் மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவர் பிரலாய் பாலுடன் அலைபேசியில் பேசி தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட ஆடியோ கிளிப்பை அம்மாநில பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த உரையாடலை கல்கத்தா நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உரையாடலின் போது, ​​மமதா, “நீங்கள் ஒரு இளைஞன், நீங்கள் நிறைய வேலை செய்கிறீர்கள், எனக்குத் தெரியும். தயவுசெய்து இங்கே கொஞ்சம் உதவுங்கள், உங்களுக்கு எந்தவித சிரமமும் இதில் இருக்காது” என்று பேசியுள்ளார். அதற்கு பிரலாய் பால், ‘கம்யூனிச முண்டர்கள் எங்கள் குடும்பத்தை தாக்கினர். அப்போது சுவேந்து அதிகாரி எனக்கு உதவினார்.  அவர் இணைந்துள்ள பா.ஜ.கவினர் நல்லவர்கள் என நான் நம்புகிறேன்’என கூறி மமதாவின் வேண்டுகோளை  மறுத்துள்ளார்.