மகாலட்சுமி தங்க பிஸ்கட்

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், எலிசபெத் அரசிக்கு சொந்தமான ராயல் மின்ட் நிறுவனம், 1,100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகளை தயாரித்து, உள்நாடு மற்றும் 60க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் முதன் முறையாக வரவுள்ள தீபாவளியை முன்னிட்டு, ஹிந்து கடவுளான மகாலட்சுமியின் உருவம் பொறித்த, 20 கிராம் தங்கக் கட்டிகளைப் தயாரித்துள்ளது. கார்டிப் நகரில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து, எம்மா நோபல் என்ற வடிவமைப்பாளர் இந்த நாணயத்தை உருவாக்கியுள்ளார். நிறுவனத்தின் வலைதளம் வாயிலாக தங்கக் கட்டிகள் விற்பனை செய்யப்படும். ‘ஓம்’ என்ற பிரவண மந்திரம் பதித்த அழகிய பிரத்தியேகப் பெட்டியில் வைத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.