ம. வெங்கடேசன் மீண்டும் நியமனம்

தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ம. வெங்கடேசன் இரண்டாவது முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம. வெங்கடேசனும் துணைத் தலைவராக ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சனா பன்வாரும் உறுப்பினராக கேரளாவை சேர்ந்த பி.பி. வாவா என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2025 மார்ச் மாதம் 31ம் தேதி வரை அந்த பதவியில் இருப்பார்கள்” என கூறப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள ம. வெங்கடேசன், தன்னை இந்த பொறுப்புக்கு பரிந்துரை செய்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உல்ளிட்டோருக்கு நன்றி நன்றி தெரிவித்துள்ளார்.