எல்.டி.டி.இ உறுப்பினர் கைது

தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சத்குணம் என்ற சபேசனை கைது செய்துள்ளது. விசாரணையில், சென்னை, வளசரவாக்கத்தில் வசிக்கும் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்பினரான அவர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அதில் கிடைக்கும் வருமானத்தை பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்கு பயன்படுத்தி வந்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட சத்குனம் பாரதத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் அனுதாபிகளுடன் பல சதி ஆலோசனை கூட்டங்களையும் நடத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.