உயிர் காக்கும் ரத்தத் துளிகள்

பதினெட்டு வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட இருக்கும் சூழலில், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரத்ததானம் செய்ய இயலாது. இதன் மூலம் வரும் சில மாதங்களுக்கு ரத்ததிற்கும் கூடுதலான தட்டுப்பாடு வர வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் ரத்த தானம் செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். – எச்.எஸ்.எஸ் அமைப்பு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த 30.04.2021 அன்று மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், சின்மயா மிஷன், விவேகானந்தா கேந்திரா, ஆர் எஸ் எஸ், சேவா பாரதி, ஆரோக்கிய பாரதி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய ரத்த தான முகாமை நடத்தின. இதில், 43 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 47 பேர் ரத்த தானம் செய்தனர். வந்தவர்களில் 14 பேர் தடுப்பூசி, இரத்த கொதிப்பு உள்ளிட்ட சில மருத்துவ காரணங்களால் தேர்வாகவில்லை. இதில் பங்குகொண்ட ரத்த தானிகளுக்கும், மருத்துவ குழுவுக்கும், தன்னார்வலர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் – எச்.எஸ்.எஸ் அமைப்பு தன் நன்றியினை தெரிவித்துக்கொண்டது. நாமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன் ரத்த தானம் செய்வோமே!