ஜெய்ஹிந்த் சொல்வோம்

வேளாண் பட்ஜெட்டை குறித்து சட்டசபையில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் காந்தி, முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டிற்கும் தி.மு.க அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவு செய்ததற்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும், ‘இன்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை சொல்லாததற்காக சட்டசபையில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. எனவே, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம் அனைவரும், ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்’ என்று பேசினார். சபாநாயகர் அப்பாவு, ‘நீங்களே அதனை பதிவு செய்து விட்டீர்கள், நன்றி’ என தெரிவித்தார்.