கடைசிவரை போரிடுவோம் – தைவான்

சீனா தைவானை தனது பிரதேசமாகக் கூறி வருகிறது. அந்த பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு ஆபத்து சில வாரங்களாக அதிகரித்திருக்கிறது. இது குறித்து அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. அதற்கேற்ப சமீப காலமாக, தைவான் தீவின் அருகே விமானம் தாங்கி கப்பல்கள் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தைவான் மீது சீனா ராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது. தைவான் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் தினமும் சீன விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளதாக தைவான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதற்காக, தைவான் தொடர்ந்து தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. ராணுவத்திற்காக அதிக செலவும் செய்து வருகிறது. இந்நிலையில், சீனா எங்கள் நாட்டை தாக்கினால் எங்கள் நாடு இறுதிவரை போராடும் என்று தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு தெரிவித்துள்ளார்.