நேர்மறை சிந்தனையை வளர்ப்போம்

கொரோனா காலத்தில் நம்மை சுற்றி எதிர்மறை சிந்தனைகள் சூழ்ந்துள்ளது. இதில் இருந்து மக்கள் மீண்டு நேர்மறை சிந்தனையை பெற ஆன்மிக அமைப்புகள், சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து ‘கோவிட் ரெஸ்பான்ஸ் டீம்’ என்ற பெயரில் முன்முயற்சியாக ‘வரம்பற்ற நேற்மறை’ என்ற ஒரு தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இன்று முதல் மே 15 வரை நடைபெற உள்ள இந்த சொற்பொழிவில் ஆன்மீகம், தர்மநெறி, மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக சொற்பொழிவுகள் நடைபெறும்.
இதில், சத்குரு ஜக்கி வாசுதேவ், முனிஷ்ரி பிரமான்சாகர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி, பூஜ்யனேய சங்கராச்சாரிய விஜயேந்திர சரஸ்வதி, பத்மவிபூஷன் சோனல் மான்சிங்,  ஆச்சார்யா வித்யாசாகர், பூஜ்யஸ்ரீ மகந்த் சந்த் ஞானதேவ் சிங் உள்ளிட்டோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். மே 15 அன்று ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் உரையாற்றுகிறார். இந்த சொற்பொழிவுகள் தினமும் மாலை 4:30 மணி முதல் மாலை 5 மணி வரை (facebook.com/VishwaSamvadKendraBharat மற்றும் youtube.com/VishwaSamvadKendraBharat) டிஜிட்டல் ஊடக தளங்கள் மூலம் ஒளிபரப்பப்படும்.