கிருஷ்ண யாதவ் கொலை வழக்கு

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பா.ஜ.கவின் யுவ மோர்ச்சா மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ண யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி, காலி கார்ட்ரிட்ஜ் ஆகியவற்றை கைப்பற்றினர். முதலில் தற்கொலை என சந்தேகிக்கப்பட்ட இவ்வழக்கு விசாரணையில், சம்பவம் நடந்த இடத்தைத் தவிர வேறு சில இடங்களிலும் ரத்தக் கறைகள் உள்ளதால் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கிருஷ்ணா யாதவ் மறைவையடுத்து சிக்கந்தராவ் தொகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சம்பவம் தற்கொலையாக இருக்க முடியாது என்றும் அவரது சகோதரி காவல்துறையில் தெரிவித்துள்ளார்.