கோவாக்சின் ஜி.எம்.பி சான்றிதழ்

பாரதத்தில் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவான உலகத்தரம் வாய்ந்த கொரோனா தடுப்பூசியான பாரத் பயோடெக்கின் ‘கோவாக்சின்’ பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஐ.நா பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கோவாக்சின் தடுப்பூசியின் மற்றொரு மைல்கல்லாக ஹங்கேரி நாட்டிடமிருந்து ஜி.எம்.பி எனப்படும் நல் உற்பத்தி சான்றிதழை கோவாக்சின் பெற்றுள்ளது. இது EUDRAGDMP என்ற ஐரோப்பிய சமூகத்திடமிருந்து பெற்ற சிறந்த உற்பத்திக்கான நற்சான்றிதழ்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.