கிஷோர் கே. சுவாமி மீது குண்டர் சட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் குறித்து சமூகவலைத் தளங்களில் அவதூறு பரப்பியதாக தி.மு.க ஐ.டி பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரவோடு இரவாக சமூக வலைத்தள பிரபலம் கிஷோர் கே. சுவாமியை கைது செய்தது காவல்துறை. நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கிஷோர் கே. சுவாமியின் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், அவர் மீது குண்டர் சட்டத்தை போட்டுள்ளனர் காவல்துறையினர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தேசியத் தலைவர்கள், தமிழக பா.ஜ.க தலைவர்கள், அ.தி.மு.க முதல்வர், அதன் தலைவர்கள் என பலரையும் தரம் தாழ்ந்தும் அவதூறாகவும் பேசிய ஆ. ராசா, சீமான், திருமுருகன் காந்தி, திருமாவளவன், வை.கோ, சுந்தரவள்ளி உள்ளிட்டோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழகக் காவல்துறை, கிஷோர் கே சுவாமி மீது மட்டும் அவசர அவசரமாக எடுத்த கைது நடவடிக்கைக்கு பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.