கிஷோர் கே சுவாமி குற்றச்சாட்டு

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் தி.மு.க தலைவர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு எதிரான பதிவுகளை போட்டார் என கூறி, சில தி.மு.க ஆதரவு ஊடகத்தினர் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஜூன் 2021ல் கைது செய்யப்பட்டவர் கிஷோர் கே சுவாமி. சமீபத்தில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சிறைச்சாலையில் தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை தெரிவித்துள்ளார். அதில், சன் டிவியின் மூத்த பத்திரிக்கையாளர் எம். குணசேகரன், காவல்துறையினரிடம் தன்னை தனிமைப்படுத்தப்பட்டு சிறையில் நிர்வாணமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநரான கார்த்திகைச்செல்வன், சிறையில் தனக்கு இறைச்சி ஊட்டுமாறு காவல்துறையினரை வழிநடத்தினார்’ என்று கூறியுள்ளார். கிஷோர் கே சுவாமியின் ட்வீட்டைப் பகிர்ந்த மற்றொரு டுவிட்டர் பயனரான @Devi_Uvacha, ‘கிஷோர் கே சுவாமிக்கு காபி, தண்ணீர் குடிக்கவும் கழுவுவதற்கு ஒரு சிறிய குவளை மட்டுமே கொடுக்கப்பட்டது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.