மதம் மாறாததால் அடி உதை

கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள கோணக்காடு பகுதியை சேர்ந்த மிதுன் என்பவர் தீப்தி என்ற பெண்ணை காதலித்தார். மிதுன் ஹிந்து, தீப்தி கிறிஸ்தவர் என்பதால், இரு வீட்டாரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து மிதுனை கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்தியுள்ளார் பெண்ணின் அண்ணன் டேனிஸ். அவரின் வற்புறுத்தலுக்கு மிதுன் பணியாததால் ஆத்திரம் அடைந்த டேனிஸ், மிதுனை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.