கேரள அபாயம்

டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இணைய வழியில் கலந்துகொண்டு “பயங்கரவாதத்தின் அரசியல் மற்றும் கேரளாவில் பயங்கரவாதத்தின் எழுச்சி” என்ற தலைப்பில் பேசிய கேரள மாநில முன்னாள் காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி) டி.பி. சென்குமார் ‘பாரதத்திலேயே கேரளாவில் அதிகரித்து வரும் கட்டுக்கடங்காத முஸ்லீம் மக்கள்தொகை வளர்ச்சியும், பயங்கரவாதமும் கேரளாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆபத்தை விளைவிக்கும். பாரதத்திலேயே கேரளாதான் மிகவும் தீவிர வன்முறை மத, அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட சமூக செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இது மேற்கு வங்கத்தை விடவும் மோசமான சூழல்.

தேசப் பிரிவினைக்குப் பிறகு நமது நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை சுமார் மூன்று கோடியாக இருந்தது, அது இப்போது 22 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது ஏழு மடங்குக்கும் மேலான வளர்ச்சி. 1970களில் கேரளாவில் 18 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை தற்போது 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

1980களில் நான் காவல்துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கியபோது, ​​பர்தா அணிந்த எந்த முஸ்லீம் பெண்ணையும் பார்க்கவில்லை. இன்று பர்தா அணியாத எந்த முஸ்லீம் பெண்ணையும் நீங்கள் காண முடியாது. கேரளாவில் இப்படித்தான் பயங்கரவாதம் பரவி வருகிறது. இதன் விளைவாக, கேரளாவில் பல கிராமங்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. மக்கள் தொகையை பெருக்கி அதிகாரத்தை கைப்பற்றுவதே இதன் நோக்கம். பாரதத்தை முஸ்லிம் நாடாக மாற்றுவதே அவர்களின் இறுதி நோக்கம்’ என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கேரள பா.ஜ.கவின் சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தலைவர் ஜெயசங்கர், ‘கேரளாவில் ஜமாத் இ இஸ்லாமியின் தாக்கம் மிகப்பெரியது. அது சத்தமின்றி கேரள முஸ்லிம்களிடம் மிக ஆழமாக ஊடுருவியுள்ளது. அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். கேரளாவைச் சேர்ந்த பல பயங்கரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர்’ என கூறினார்.

எழுத்தாளரும் கட்டுரையாளருமான டாக்டர் பினய் குமார் சிங் கூறுகையில், ‘கேரளா பயங்கரவாதத்தை உற்பத்தி செய்வது மட்டுமின்றி பயங்கரவாதத்தை அது ஏற்றுமதியும் செய்கிறது’ என தெரிவத்தார். மேலும், 2004ல் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல முயற்சித்தது, 2010ல் பேராசிரியர் டி.ஜே.ஜோசப்பின் கைகளை வெட்டியது, பல ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, ஹிந்து அமைப்பினர்களை கொன்றது உள்ளிட்ட கேரள முஸ்லிம் பயங்கரவாதிகளின் கேரள பயங்கரவாதிகளின் பயங்கரவாத செயல்களை பட்டியலிட்டார்.