கட்ஜூவின் அடுத்த சர்ச்சை

ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, எதையாவது சொல்லிவிட்டு பிறகு சர்ச்சையில் சிக்கிக்கொள்வதில் புகழ் பெற்றவர். அந்த வகையில் தற்போது, முஸ்லிம்களின் மத கோஷமான ‘அல்லா ஹு அக்பர்’ என்பதை கேலி செய்யும் விதமாக, கடந்த புதன்கிழமை அன்று “ஹனுமான்ஜி யூ அக்பர்” என்று முகநூலில் பதிவிட்டார். இது முஸ்லிம்களிடையே கடும் கோபத்தை தூண்டியது. சமூக ஊடகங்களில் அவரின் இந்த பதிவுக்கு பலரும் கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளனர். இதனால், தனது அந்த முகநூல் பதிவை அவர் நீக்கிவிட்டார். முன்னதாக, தன்னை ஒரு நாத்திகர் என கூறிக்கொண்டவர் கட்ஜு என்பது குறிப்பிடத்தக்கது.