காளி கோயில் சிலை உடைப்பு

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள மவ்பா பகுதியில் உள்ள காளி கோயிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சனிக்கிழமை இரவு சேதப்படுத்தினர். அங்கிருந்த கடவுள் சிலைகளும் உடைக்கப்பட்டன. காவல்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும், ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பு கோரியுள்ளது.