ஜீயர் நியமன அறிவிப்பு ரத்து

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் காலியாக உள்ள 51வது ஜீயரை நியமனம் செய்வதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்க, கோயில் இணையதளத்தில் சமீபத்தில் அறிவிப்பு வெளியியானது. ஜீயரை அறநிலையத்துறை நியமிக்க எதிர்ப்பு கிளம்பியதுடன், கோயிலில் உள்ள ஸ்தலத்தார்கள்தான் ஜீயரை நியமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், கோயில் இணைஆணையர் எஸ்.மாரிமுத்து, ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் ஜீயர் நியமனம் கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்டது. கோயில் நிர்வாகம் மூலம்தான் வழக்கமாக ஜீயர் நியமிக்கப்படுகிறார். அவருக்கு ஊதியம் உண்டு. ஜீயராக பொறுப்பேற்கும்போதே, கோயில் நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டு, கோயில் பணியாளராக என் பணிகளை செய்வேன் என கடிதம் கொடுப்பதுதான் நடைமுறையில் உள்ளது. தற்போது நிர்வாக காரணத்துக்காக ஜீயர் நியமனம் குறித்த அறிவிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.