சி.பி.எம் மீது ஐ.யு.எம்.எல் குற்றச்சாட்டு

பி.எப்.ஐ அமைப்பினரால் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட கடையடைப்பு வன்முறைகளின்போது ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டை அந்த அமைப்பினரிடம் இருந்தே வசூலிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது கேரள அரசு அந்த அமைப்பினரின் சொத்துக்க்களை இதற்காக கையகப்படுத்தி வருகிறது. இந்த சூழலில், பி.எப்.ஐ அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் எங்கள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யு.எம்.எல்) கட்சியின் அப்பாவி தொண்டர்களை கேரளவை ஆளும் கம்யூனிச அரசு வேட்டையாடுகிறது. வன்முறையில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை சிபிஎம் தலைமையிலான மாநில அரசு செயல்படுத்தி வருகிறது என அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த இணைப்பு செயல்முறைக்கான இத்தகைய பட்டியல் எங்கிருந்து கிடைத்தது என்பதை கேரள அரசு தெளிவுபடுத்த வேண்டும். பல்வேறு மக்கள் பிரதிநிதிகள், பிற அரசியல் கட்சிகளில் தீவிரமாகப் பணியாற்றுபவர்கள் மற்றும் கிரிமினல் வழக்குகள் இல்லாதவர்கள் அனைவரும் குறிவைக்கப்படுகிறார்கள். உண்மையான புகார் ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கு எதிரானது, ஆனால் இப்போது, வன்முறையில் ஈடுபட்டு உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக அப்பாவி மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் எழுப்பப்படும்” என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பி.கே குன்ஹாலிக்குட்டி செய்தியாளர்களிடம் கூறினார். கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியில் முக்கிய கூட்டாளியாக ஐ.யு.எம்.எல் உள்ளது குறிப்பிடத்தக்கது.