இஸ்ரேல் இழுபறி

இஸ்ரேலில் பொருளாதார மந்தநிலை, கொரோனா பரவலை கையாள்வதில் சிக்கல் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றால் அந்த நாடு கடந்த 2 ஆண்டுகளில் 4வது முறையாக பொதுத்தேர்தலை சந்தித்துள்ளது. கடந்த மூன்று தேர்தல்களிலும் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் அண்மையில் நான்காவது முறையாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில், 87.5 சதவீத வாக்குகள் பதிவாகின. உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. இதில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 59 இடங்களை கைப்பற்றியது. எதிரணியும் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள ‘ராம்’ என்ற சிறிய அரபு கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ் யாருக்கு தனது ஆதரவு என்று அறிவிக்கவில்லை. ஒருவேளை அவர் எந்தக் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிக்காவிட்டால் இஸ்ரேல், மீண்டும் 5-வது பொதுத்தேர்தலை சந்திக்க நேரிடும்.