வங்கதேச முஸ்லிம்கள் மிரட்டல்

கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் முஸ்லிம் பெண்களை புர்கா, ஹிஜாப் போன்ற உடைகளுடன் அனுமதிக்காவிட்டால்,  வங்க தேசத்தில் உள்ள ஹிந்துக்களின் வாழ்க்கையை அவலப்படுத்துவோம். வங்க தேசத்தில் எந்த ஒரு ஹிந்து பெண்ணும் நெற்றித் திலகம், வளையல்களை அணிய அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர் வங்கதேசத்தில் உள்ள ‘இஸ்லாமிய அந்தோலன் பங்களாதேஷ்’ என்ற அடிப்படைவாத அமைப்பினர். இது, வங்கதேச முஸ்லிம்கள் எதேச்சையாக எடுத்த முடிவாகத் தெரியவில்லை. பாரதத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட  பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட முடிவாகவே இது தெரிகிறது. முன்னதாக ஆப்கனை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் அரசியல்வாதிகள், பல வெளிநாட்டு முஸ்லிம் பிரபலங்கள்கூட இந்த பிரச்சனையில் ஏற்கனவே தலையிட்டுள்ளனர். இதனால், இது பாரதத்தில் கலவரத்தைத் தூண்ட துவக்கப்பட்டுள்ள சர்வதேச சதியாகவே தோன்றுகிறது என சமூக ஊடகத்தில் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன