ஆர்யன் கானின் சர்வதேசத் தொடர்பு

போதைப்போருள் விருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு வரும் அக்டோபர் 7வரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் (ஏன்.சி.பி) காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது என்.சி.பி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு உள்ளது. போதைப்பொருள் விநியோகம் செய்வதற்காக அவற்றை வாங்கியவர் ஆர்யன் கான் தான். இவை, அவரின் வாட்ஸ்ஆப்பை ஆய்வு செய்தபோது தெரியவந்துள்ளது. அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். இதற்கிடையே திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும், ஆர்யனை குழந்தை என கூறி அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், இந்திய சட்டத்தின்படி, 23 வயதுடைய ஒரு நபர் குழந்தை அல்ல என்பதுதான் எதார்த்தம்.