ஒருங்கிணைப்பு அவசியம்

சென்னை நந்தம்பாக்கத்தில் கோதண்டராமர் கோயிலுக்கு சொந்தமான 150 ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி நடக்கிறது. அவற்றை மீட்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அறநிலையத்துறை வழக்கறிஞர், ‘வருவாய் ஆவணங்களை சரிபார்ப்பது, விசாரணை நடத்துவது, சொத்துக்களை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த செயல்பாடு தேவைப்படுகிறது என்றார். இதனையடுத்து ‘இக்கோயில் நிலங்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் துறை, அறநிலையத்துறை, உள்துறை உள்ளிட்ட அதிகாரிகளின் கூட்டத்தை, ஆறு வாரங்களில் கூட்டி, நடவடிக்கை வழிமுறைகள் குறித்து ஆராய வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.