ஐ.டி ரெய்டில் சிக்கிய புள்ளிகள்

முன்னணி நடிகையான டாப்ஸி பன்னு, பாலிவுட் தயாரிப்பளரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப்பின் மும்பை, புனேவில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள்  சோதனை செய்து பெரும் தொகை, சட்டவிரோத பரிவர்த்தனைகளை கண்டறிந்துள்ளனர். டாப்ஸி பன்னுவின் வீட்டில் கணக்கில் காட்டாத ரூ. 5 கோடி ரொக்க ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அனுராக் காஷ்யப்பின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் போலி செலவினங்களை காட்டி சுமார் 20 கோடி ரூபாய்கான வரி எய்ப்பையும் கண்டறிந்துள்ளனர். மேலும் அவரின் பாண்டம் பிலிம்ஸின் பங்குதாரர்கள் சுமார் 600 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.  வருமானவரி சோதனையின்போது இவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என இவர்களுக்காக காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் புலம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.