சிவில் சர்வீஸ் தேர்வுகள்

மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் 2021ம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்தேர்வுகளில் பாரதம் முழுதும் இருந்து பத்து லட்சம் பேர் வரை எழுதுவார்கள். தற்போது, 712 சிவில் அதிகாரிகளை தேர்வு செய்ய 2021-ம் ஆண்டுக்கான  முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 27ல் நடக்க உள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் நடக்கும் இந்த தேர்விற்கு https://upsconline.nic.in என்ற இணையத்தில் மார்ச் 24, மாலை ஆறு மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.